அலகு குத்தி,பறவைகாவடியில் ஊர்வலம்.
மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆற்காடு மாரியம்மன்,பிளேக் மாரியம்மன்,மற்றும் மதுரைவீரன் கோவில்களின் 107 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடந்தது.கடந்த 6 ந்தேதி பொரிசாட்டுடன் துவங்கிய விழாவில் 13 ந்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடந்தது.19 ந்தேதி சக்தி கரகம்,பூவோடு அழைத்தல் நடந்தது.20 ந்தேதி மதியம் 12 மணிக்கு மதுரைவீரன் அழைப்பும்,இரவு 10 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்தது.இன்று காலை 10 அளவில் மைதானம் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும்,பறவை காவடியில் அம்மன் வேடமிட்டு தொங்கியபடி நேர்த்திக்கடன் செய்தனர்.
நிகழ்ச்சியில் விழாக்குழு நிர்வாகிகள் ஈ.ஆர்.ராமன்,கே,.ஆர்.பழனிசாமி,
பிரபு,தர்மன்,வீரமணி,பரமன்,கிரு ஷ்ணன்,குமார்,காளியப்பன்,அர்ஜு னன்,தேவராஜ்
உட்பட ஏராளமான் பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஊர்வலம் ஊட்டி மெயின்
ரோடு,பேருந்து நிலையம்,அண்ணாஜிராவ் ரோடு வழியாக எம்.எஸ்.ஆர்.புரம் கோவிலை
அடைந்தது.அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இன்று இரவு 7 மணிக்கு
மாவிளக்கு,பொங்கல் வைத்தல்,நாளை மஞ்சள் நீராடல் வெள்ளிக்கிழமை
மகாதீபாராதனை,அன்னதானம் ஆகியவை நடக்கிறது.26 ந்தேதி மறுபூஜை நடக்கிறது.
0 comments:
Post a Comment