ஓவியப்போட்டி: சத்தி காமதேனு கல்லூரி மாணவர்கள் முதலிடம்
கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் சத்தி காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம்
சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற துண்டு பிரசுரம்
தயாரித்தல்,வாசகம் எழுதுதல் மற்றும் ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் காமதேனு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
எஸ்.வெண்ணிலா,ஆர்.முருகன் ஆகியோர் முதல் இடத்தையும் பி.ரவி இரண்டாவது
இடத்தையும் பியார்லின் நான்ஸி, எ.சுரேஷ்குமார், ரஞ்சித்குமார்,
என்.நிஜந்தரன் ஆகியோர் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளனர். பரிசு பெற்ற
மாணவ,மாணவர்களை கல்லூரி தாளாளர் ஆர்.பெருமாள்சாமி, செயலாளர்
பி.அருந்ததி,இணைச் செயலாளர் பி.மலர்ச்செல்வி மற்றும் முதல்வர்
கே.செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.
0 comments:
Post a Comment