மரத்தில் காரி மோதி விபத்து: அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பலி
சத்தியமங்கலம் அருகே புளியமரத்தில் கார் மோதியதில் அதில் பயணம் செய்த கணவன்- மனைவி உட்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர்
செல்லமுத்து(45). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி நாகரத்தினம்(38). மகன்கள்
நவீன்(14), அஸ்வின்(13). மற்றும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள
பொங்கியானூர் கிராமத்தை சேர்ந்த மைத்துனர் பெரியசாமி(35). மனைவி
அன்னபூரணி(30) மகன் அஸ்வத்(8) ஆகியோர் என 7 பேர் காரில் மைசூருக்கு
சுற்றுலா சென்றனர். அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து இவர்கள் நள்ளிரவில்
மைசூரில் இருந்து சத்திக்கு சென்றுகொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை
அம்மன் சேம்பர் பிரிவு என்ற இடத்தில் கார் எதிர்பாராத விதமாக ரோட்டின்
ஓரத்தில் இருந்த புளியமரத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த
செல்லமுத்து, அவரது மனைவி நாகரத்தினம், பெரியசாமி மகன் அஸ்வத் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்
தகவலறிந்த
சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமி, அன்னபூரணி, அஸ்வின் மற்றும் நவீன்
ஆகியோரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் குறித்து சத்தி போலீஸார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்தபோது, கார் ஓட்டும் போது செல்லமுத்து நீண்ட தூரம் வந்த
அசதியில் சற்று தூங்கியதால் எதிர்பாராதவிதமாக கார் மரத்தில் மோதி
விபத்துக்குள்ளானது தெரியவநத்து.
0 comments:
Post a Comment