பண்ணாரி அருகே ராஜன் நகர் முத்துமாரியம்மன்கோவில் கம்பம்,பத்திரகாளியம்மன் குண்டம் திருவிழா.
பவானிசாகர்
அருகே பண்ணாரி அடுத்துள்ள ராஜன் நகர் அருள்மிகு முத்துமாரியம்மன்
கோவில் மூன்றாம் ஆண்டு கம்பம் திருவிழா,பத்திரகாளியம்மன் கோவில் குண்டம்
திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது.4 ந்தேதி குண்டம் ராஜன்
நகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 22 ந்தேதி முனியப்பன்
பூஜை,மாவிளக்கு நடந்தது.நேற்று 27 ந்தேதி இரவு 10.00 மணிக்குராஜன் நகர்
ஊர்கவுடர் வி.நஞ்சுண்ட கவுடர் தலைமையில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு
அபிசேக அலங்கார பூஜை நடந்தது.இரவு 11 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுடன்
விழா துவங்கியது.பின்னர் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டு பூச்சாட்டு நடந்தது. தாரை தப்பட்டைகள் வான வேடிக்கைகள் முழங்க
கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்குகோவில் முன்பு
கம்பம் நடப்பட்டது.பின்னர் ஆண்களும்,குழந்தைகளும் கம்பத்தை சுற்றி
ஆடிவந்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் குடங்கள் எடுத்துவந்து கம்பத்திற்கு நீர்
ஊற்றி வழிபட்டனர் தொடர்ந்து .இன்றும் அதிகாலையில் பெண்கள்
குழந்தைகள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர்.வருகிற ஜூன் 2
ந்தேதி காலை 7 மணிக்கு குண்டத்திற்கு எரிகரும்பு வெட்டும் நிகழ்ச்சி
நடக்கிறது.இரவு 9 மணிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.3 ந்தேதி
செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு அம்மன் அழைத்தல்,இரவு 10 மணிக்கு அரண்மனை
பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.4 ந்தேதி அதிகாலை 6 மணிக்கு
பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
நடக்கிறது.10 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு
முத்துமாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.இரவு 8 மணிக்கு
முத்துமாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.5 ந்தேதி
மஞ்சள் நீராடல்,11 ந்தேதி மறு பூஜையும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை
ராஜன் நகர் ஊர்கவுடர் வி.நஞ்சுண்ட கவுடர்,எஸ்.வெங்கடாசலம்,மற்றும்
ஊர்ப் பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment