காரமடை அருகே மருதூர் ஆஞ்சநேயர் கோவில் 9 ஆம் ஆண்டுவிழா.
மேட்டுப்பாளையம்.
காரமடை அருகே உள்ள மருதூர் அனுமந்தராயசாமி கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயா
அறக்கட்டளையின் 9 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடந்தது.காலை 8.00 மணிக்கு
காரமடை ஸ்தலத்தார் சுவாமிகள் தலைமையில் சுதர்சன ஹோமம் நடந்தது.11.30
மணிக்கு அறக்கட்டளையின் 9 ஆம் ஆண்டுவிழா மற்றும் வைகாசி மாத முதல்
சனிக்கிழமை விழா துவங்கியது.கிரிஜா சாம்ராஜ் குத்துவிளக்கு
ஏற்றிவைத்தார்.ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளை தலைவர் கே.ஆர்.கனகராஜ் வரவேற்று
பேசினார்.கோவை செந்தில் குரூப் நிறுவன தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல
அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமை தாங்கினார்..முன்னாள் போலீஸ்
டி.,எஸ்.பி.ஆர்.வெள்ளிங்கிரி, எஸ்.ஜோதிமணி,டி.ஆர்.எஸ்.பிராபர் ட்டிடெவலப்பர்ஸ்
நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,கோவை மாவட்ட ஒக்கலிக கவுடர் மகஜன
சங்க தலைவர் சாம்ராஜ்,வக்கீல் மணிவாசகம்,பொறியாளர் எம்.ஜெயராம்,ஆர்.வி.சி
நடராஜ், எல்.ஐ.சி. ஜெயக்குமார் உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில்
ஓ.ஆறுமுகசாமி பேசியதாவது;ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளையின் 9 ஆம் ஆண்டுவிழாவில்
கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.எங்களது
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில்
அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு
வருகிறது.இந்த ஆண்டும் உதவித்தொகை தொடரும்.யாரும் கவலைப்பட வேண்டாம்.வருகிற
24 மற்றும் 25 ந்தேதி கோவை கொடிசியாவில்சுமார் 80 ஆயிரம் மாணவர்களுக்கு
கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் படித்த
மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக
உள்ளதால் விழாவை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.மீதமுள்ள
மாணவர்களுக்கு அடுத்த மாதம் வழங்கப்படும்.அதற்க்கான தேதி பின்னர்
அறிவிக்கப்படும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.விற்கு நமது தமிழக
ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் ஆதரவு அளித்து மாபெரும் வெற்றியை பெற
ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் என்.தினகரன்
நன்றிகூறினார்.
பின்னர் அன்னதானம் நடந்தது.
0 comments:
Post a Comment