சத்தியமங்கலம், மே.20. கடம்பூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து
வருவதால் விவசாயிகள் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இதை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள கடம்பூர், கல்கடம்பூர், இருட்டிபாளையம், பசுவனாபுரம், கரளையம், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி விவசாயிகள் மலைக்காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ருட், கேரட் வகைகளும், மரவள்ளிக்கிழங்கும் பயிரிடுகின்றனர். கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக பரவலாக மலைகிராமங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மானவாரி பயிராக மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவதற்கு
டிராக்டர்களை பயன்படுத்தி நிலங்களில் உழவு செய்யப்பட்டு மரவள்ளி கரணைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வருவதால் விவசாயிகள் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இதை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள கடம்பூர், கல்கடம்பூர், இருட்டிபாளையம், பசுவனாபுரம், கரளையம், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி விவசாயிகள் மலைக்காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ருட், கேரட் வகைகளும், மரவள்ளிக்கிழங்கும் பயிரிடுகின்றனர். கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக பரவலாக மலைகிராமங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மானவாரி பயிராக மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவதற்கு
டிராக்டர்களை பயன்படுத்தி நிலங்களில் உழவு செய்யப்பட்டு மரவள்ளி கரணைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பசுவனாபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜன் கூறியதாவது. தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி மரவள்ளி கரணைகளை நடவு செய்துவருகிறோம். இதற்கு முள்வாரி ரகம் ஏற்றதாகும். இந்த ரகம் மழை சற்று குறைந்தாலும் மானாவாரியில் நன்கு செழித்து வளர்ந்து பலன்கொடுக்கும். உழவு செய்யப்பட்ட நிலத்தில் ஒனறரைக்கு ஒன்றரை அடி
இடைவெளியில் கரணைகள் நடப்படுகிறது. தற்போதுள்ள ஈரப்பதத்தில் செடிகள் உயிர்பிடித்து வளர்ந்து விடும். தொடர்ந்து மழை கிடைக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்துவிடும். இரண்டு மாதத்தில் களை வெட்டி உரமிடுவோம். 10 மாதப்பயிரான மரவள்ளிகிழங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டன் ஒன்றுக்கு ரூ.5000 க்கு விற்பனையானது. விளைச்சல் குறைந்ததால் தற்போது 1 டன் ரூ.12000 வரை விற்பனையாகிறது. 1 ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைத்தால் செலவு போக ரூ.80000 லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைந்தால் லாபம் குறையும் என்றார்.
இடைவெளியில் கரணைகள் நடப்படுகிறது. தற்போதுள்ள ஈரப்பதத்தில் செடிகள் உயிர்பிடித்து வளர்ந்து விடும். தொடர்ந்து மழை கிடைக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்துவிடும். இரண்டு மாதத்தில் களை வெட்டி உரமிடுவோம். 10 மாதப்பயிரான மரவள்ளிகிழங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டன் ஒன்றுக்கு ரூ.5000 க்கு விற்பனையானது. விளைச்சல் குறைந்ததால் தற்போது 1 டன் ரூ.12000 வரை விற்பனையாகிறது. 1 ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைத்தால் செலவு போக ரூ.80000 லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைந்தால் லாபம் குறையும் என்றார்.
0 comments:
Post a Comment