அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை தீவிரம்
சத்தியமங்கலம், மே.20. பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் அரசு உத்திரவின்படி ஆங்கிலவழிக்கல்வி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 வயது நிரம்பிய குழந்தைகளை பெற்றோர்கள் அரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இப்பள்ளியில் கணினி இயக்கம் கற்பித்தல், சிடி மூலம் மொழிப்பயிற்சி, கணித உபகரண பெட்டி பயன்பாடு, தியான பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. ஆர்.ஓ. தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது என பள்ளி தலைமையாசிரியர் லதா தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலக்கல்வி தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கு£ந்தைகளை
அரசுப்பள்ளியில் சேர்க்க முன் வந்துள்ளனர்.
அரசுப்பள்ளியில் சேர்க்க முன் வந்துள்ளனர்.
0 comments:
Post a Comment