சத்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் விழா
சத்தியமங்கலம் விளையாட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கம்பம் நடும் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் அமைந்துள்ள
விளையாட்டு மாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் வியாழக்கிழமை
துவங்கியது.விழாவையொட்டி, கோவில் முன் கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு
தினமும் புனிதநீர் ஊற்றியும் மஞ்சள் பூசியும் பெண்கள் வழிபட்டு
வருகின்றனர். கோவில் வளாகத்தில் நடப்பட்ட கம்பம் முன் இளைஞர்கள் நாள்தோறும்
கம்பத்தாட்டம் ஆடி மகிழ்கின்றனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்
ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
மே.13ம் தேதி அம்மன் அழைத்தல், 14ம் தேதி பவானி
ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு
நிகழ்ச்சி நடைபெறும். மே.15ம் தேதி காலை பொங்கல் வைத்தல் மற்றும் கம்பம்
ஆட்டமும் அதனைத் தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் கம்பம் பிடுங்குதல்
நடைபெறும். 16ம் தேதி உரி அடித்தல், 17ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா
மற்றும் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment