பிளஸ்-2:அதிக மதிப்பெண் பெற்ற அரசுபள்ளி மாணவர்-ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு
பவானிசாகர்
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் முதலிடம்
பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பவானிசாகர் எம்எல்ஏ
பி.எல்.சுந்தரம் பரிசு வழங்கினார்.
சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர்
எம்எல்ஏ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு மற்றும்
பாராட்டு விழாவுக்கு பனையம்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்
தேவேந்திரன் தலைமை வகித்தார். இதில் சத்தியமங்கலம் மலைப்பகுதி
பணஹள்ளி,சூசைபுரம்,தாளவாடி,ஆசனூ ர்,பசுவனாபுரம் மற்றும் சமவெளிப் பகுதியான கே.என்.பாளையம், ராஜன்நகர், சத்தியமங்கலம், பனையம்பள்ளி,பவானிசாகர்,புன்செ ய்
புளியம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசுமேல் நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2
தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 16 மாணவர்களுக்கு பவானிசாகர் எம்எல்ஏ
பி.எல்.சுந்தரம் தலா ரூ.1000-ம் பரிசாக வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசும்போது, முன்னாள் குடியரசுத்தலைவர்
அப்துல்கலாம், உச்சநீதி மன்ற முன்னாள் தலைமைநீதிபதி சதாசிவம் ஆகியோர்
அரசுப்பள்ளியில் படித்து உயர்ந்த நிலையை அடைந்தனர்.கல்வி மட்டுமே மனித
வாழ்க்கையை உயர்த்தும். அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களது மேல்படிப்பை தொடர
அனைத்து உதவிகளை வழங்க உள்ளதாவும் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு
ஆலோசனைகளும் வழிகாட்டுதலையும் பெறலாம் என்றார்.
மேலும், 100 சதம் தேர்ச்சி பெற்ற பனையம்பள்ளி,கே.என்.பாளையம்,ரா ஜன்நகர் ஆகிய மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமைஆசிரியர்களுக்கு எம்எலஏ பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
.
புஞ்சை
புளியம்பட்டி கே.வி.கே. மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் துரைசாமி,
தொட்டம்பாளையம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ரங்கராஜன், சுடர் இயக்குநர்
சி.நடராஜன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
0 comments:
Post a Comment