தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 23, 2014

பு.புளியம்பட்டி ப்ளேக் மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிசேக விழா.
விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி பங்கேற்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------




பு.புளியம்பட்டி,மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் கோவில்களில்,முதலாமாண்டு நிறைவு விழா மற்றும் 108 சங்காபிசேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில்,சிறப்பு அழைப்பாளராக  விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம்,பு.புளியம்பட்டியில் அமைந்துள்ளது, மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் கோவில்கள்.இக்கோவில்களின் கும்பாபிசேக விழா கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது,தொடர்ந்து,48 நாட்கள் மாரியம்மன்,ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் கோவில்களில், தினசரி மூன்று கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.48 ஆம் நாள் நிறைவு விழாவாக மண்டலபூஜை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்,மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன், ஊத்துக்குழி அம்மன்  கோவில்களில், கும்பாபிசேக விழா நடத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில், முதலாமாண்டு நிறைவு விழா மற்றும் 108 சங்காபிசேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

விழாவையொட்டி,மே 22ஆம் தேதி மாலை பவானி ஆற்றிலிருந்து,புனித நீர் தீர்த்தக்குடங்களில் ஏராளமான பெண்கள் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, மே 23ஆம் தேதி அதிகாலை சுதர்சன ஹோமம்,108சங்காபிசேக விழா,சிவகிரி ஆதினம் சிவசமய பண்டிதகுரு சுவாமிகள் தலைமையில்,ஊர் கவுடர்,பட்டக்கார கவுடர்,கட்டேமனை கவுடர் முன்னிலையில்,தமிழகம் முழுவதிலுள்ள எடுத்து வரப்பட்ட 18 ஸ்தலங்களின் தீர்த்தங்களை 108 சங்குகளில் வைத்து,வேத மந்திரங்கள் முழங்க,மாரியம்மன், ப்ளாக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.



பின்னர்,அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை  பூஜைகள் நடந்தன.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி துவக்கி வைத்து,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் உற்சவர் சப்பரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் வெள்ளிங்கிரி, ஒக்கலிகர் இளைஞர் அணி மாநிலத்தலைவர் ஜோதிமணி,நகர அ.தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,க வுன்சிலர் முரளிகிருஷ்ணன், துரை, சிவக்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன், வெங்கடேஷ், கார்த்தி உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள், ஒக்கலிகர் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment