தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 28, 2014

மேட்டுப்பாளையம் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 7 ஆம் ஆண்டு திருவிழா.

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி பங்கேற்பு.


பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 7 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 13 ந்தேதி பூச்சாட்டுடன் துவங்கி சிறப்பாக நடந்துவருகிறது.20 ந்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு அதனை சுற்றி ஆண்களும்,குழந்தைகளும் ஆடி வருகின்றனர், 23 ந்தேதி திருவிளக்கு பூஜை நடந்தது.27 ந்தேதி இரவு அம்மன் அழைப்பு  நடந்தது. இன்று 28 ந்தேதிகாலை 6 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம்1.00 மணிக்கு  கோவிலுக்கு  வருகை தந்த  கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமிக்கு செண்டை மேளம்,மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க கோவில் விழா குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார், தமிழ்நாடு ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜோதிமணி, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவிற்கு  தலைமை தாங்கி ஓ.ஆறுமுகசாமி சிறப்புரை ஆற்றினார்., நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டியினர்,மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார். நாளை காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடலும், 30 ந்தேதி மறு பூஜையும் நடக்கிறது.


0 comments:

Post a Comment