சிறுமுகை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை.5 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்.ரூ.7 கோடி சேதம்.
சிறுமுகை
பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழைபெய்தது.அதில் சிறுமுகை
அருகே உள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கைமேடு,உப்புபள்ளம்,வரப்பள்ளம்,டேம்
காடு,மூலையூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட நேந்திரன்,கதிலி,பூவன்
உட்பட சுமார் 5 லட்சம் வாழைகள் காற்றில் முறிந்து சேதம் அடைந்தன.சேத
மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.தற்போது
குலை தள்ளி பிஞ்சு காய்களுடன் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில்
இருந்த வாழைகள் சேதம் அடைந்ததால் ,தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க
விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment