தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 13, 2014

காரமடையில் அண்ணா தி.மு.க.சார்பில் இலவச நீர்மோர் பந்தல்.
மேயர் செ.ம.வேலுசாமி,அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி.ஆகியோர் துவக்கி வைத்தனர் .



தமிழக முதல்வரும் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கோடை பொதுமக்கள்  தாகம் தீர்க்க காரமடை ஒன்றிய மற்றும் பேரூர் கழக அண்ணா தி.மு.க.சார்பில் இலவச நீர்மோர் பந்தல் திறப்புவிழா இன்று காலை 10 மணிக்கு காரமடை கார் ஸ்டாண்டு அருகே நடந்தது.மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் தலைமை தாங்கினார்.காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,காரமடை பேரூர் கழக செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மேயர் செ.ம.வேலுசாமி,அண்ணா தி.மு.க.அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி.ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசனி,கம்மங் கூழ்,ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சாரமேடு பெருமாள், கோவை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார்,கோவை தொகுதி வேட்பாளர் வக்கீல் ஏ.பி.நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் பி.டி.சிவசாமி, ஜோ.ஜோ. எஸ்.ஜோதிமணி, காரமடை வார்டு செயலாளர்கள் எம்.சோமசுந்தரம், கே,.கிருஷ்ணன், ஏ.மணி,எம்.மூர்த்தி, ஏ.சின்னராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் நிரிஜா மூர்த்தி, கே.ஆர்.சுப்பிரமணியன், ஏ.கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர்கள் ரமா பிரபா, மனியம்மல், புஷ்பா, மற்றும் எல்.ஐ.சி.ஜெயக்குமார், ஆஞ்சநேயர் அறக்கட்டளை வீரபத்திரசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.ராஜகோபால் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment