சத்தி அருகே மான் வேட்டையாட முயன்றதாக 8 பேர் கைது: 5 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
சத்தியமங்கலம்
அருகே மான் வேட்டையாட முயன்றதாக 8 பேரை சனிக்கிழமை வனத்துறையினர் கைது
செய்தனர். அவர்களிடமிருந்து 5 நாட்டுத்துப்பாக்கி மற்றும் 5 கண்ணி வலைகள்
பறிமுதல் செய்யப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,
கொண்டப்பநாயக்கன்பாளையம் வனச்சரகம் ராமர்போலி வனப்பகுதியில் மான்
வேட்டையாடும் கும்பல் பதுங்கி இருப்பதாக சனிக்கிழமை வனத்துறையினருக்கு
தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர்
எஸ்.சண்முகம், வனவர்கள் சி.ராஜேந்திரன், கே.வெங்கடாசலம், கே.சண்முகம்,
வனக்காவலர்கள் நெளசல், நாகராஜ், கலைச்செல்வன், வேணுகோபால், மாதையன்,
லோகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சனிக்கிழமை அங்கு ரோந்து பணியில்
ஈடுபட்டனர். அப்போது, அடர்ந்த காட்டுப்பகுதியில் மானை வேட்டையாடுவதற்காக
திரிந்த 8 பேரை பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் சா.அய்யப்பன்
(எ) அடைக்கலம் (37), கு.பெரியசாமி(45), அ.ராஜேந்திரன்(31),
பெ.பெரியசாமி(41), கானக்குந்தூர் மாதவன்(45), பெரியசாமி(42),
கு|சாமியப்பன்(55), மற்றும் குசடையப்பன்(35) என்பது தெரியவந்தது.
இவர்கள் அத்தியூர், கானக்குந்தூர், கே.என்.பாளையம் பகுதிகளைச்
சேர்ந்தவர்கள் என்றும் காட்டில் வேட்டையாடுவது தொழிலாக கொண்டுள்ளனர்
என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5
நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் 5 கண்ணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது
தொடர்பாக 8 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்தி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
0 comments:
Post a Comment