திருமண காரியங்கள், கூடுதுறையில் பரிகார பூஜைகள் நிறுத்தம்
பவானி
சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில்
வளாகத்தில் திருமணங்களுக்கு வரும் 1-ம் தேதி முதலும், கூடுதுறையில் பரிகார
பூஜைகள் வரும் 6-ம் தேதி முதலும் நடதத அனுமதியில்லை என கோவில் நிர்வாகம்
அறிவித்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் சங்கமேஸ்வரர் கோவில் கும்பாஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு சுமார் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. தற்போது அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன். 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர், பெருமாள் மற்றும் வேதநாயகி அம்மன் சன்னதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் திருமண காரியங்களுக்கு ஜூன். 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, பவானி கூடுதுறை பகுதியில் வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கூடுதுறையில் பரிகாரம், காரியங்கள் மற்றும் இதர விஷேசங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் கோவில் வளாகம் களை கட்டியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் சங்கமேஸ்வரர் கோவில் கும்பாஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு சுமார் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. தற்போது அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன். 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர், பெருமாள் மற்றும் வேதநாயகி அம்மன் சன்னதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் திருமண காரியங்களுக்கு ஜூன். 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, பவானி கூடுதுறை பகுதியில் வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கூடுதுறையில் பரிகாரம், காரியங்கள் மற்றும் இதர விஷேசங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் கோவில் வளாகம் களை கட்டியுள்ளது.
0 comments:
Post a Comment