சத்தியில் ஸ்ரீ சீதாராம விவாஹ மஹோத்ஸவ உற்சவம்
சத்தியமங்கலம்
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரரேஸ்வர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ
சீதாராம விவாஹ மஹோத்ஸவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மே.11ம் பட ஆவாஹனம்,பாலிகை தெளித்தலுடன் விழா
துவங்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சத்தி மாதர்களின் அஷ்டபதி பஜனையில்
ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமை
வீதிபஜனையும் அதனைத் தொடர்ந்து தோடயமங்களம், குருத்தியானம், பஞ்சபதி
நிகழ்ச்சியும் அன்றிரவு கணேசாதி தியானங்களுடன் பூஜை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை பக்தர்கள் சீர்வரிசை கொண்டுவந்து ஸ்ரீ சீதாராம விவாஹ
மஹோத்ஸவ உற்சவம் நடந்தினர். இக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கானோர்
கலந்துகொண்டனர்.அப்போது, ஸ்ரீகாந்த கெளண்டின்ய பாகவத குழுவினரின்
நாமசங்கீர்த்தனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் ஆஞ்சநேய
உற்சவமும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை சாகேதராமா பஜனா மண்டலி
கமிட்டிக்குழுத் தலைவர் எம்.கார்த்தி, செயலாளர் கே.உமாசங்கர் ஆகியோர்
தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment