தேசிய மல்யுத்த போட்டியில் ஐஸ்வர்யா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
தேசிய அளவிலான இளையோர் மல்யுத்தப் போட்டியில்
பவானியை அடுத்த ஐஸ்வர்யா பொறியிய்ல் கல்லூரி மாணவ, மாணவியர் தமிழக அணி
சார்பில் பங்கேற்று விளையாடுகின்றனர்.
தமிழக அணி மல்யுத்த வீரர்களுக்கான தேர்வு தர்மபுரியில் நடைபெற்றது. இதில், ஐஸ்வர்யா பொறியியல் கல்லூரியின் சார்பில் பங்கேற்ற 3-ம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் தீனதயாளன், கணினி துறை மாணவர் வேல்முருகன், 2-ம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவர் சிவராஜ், கணினி துறை மாணவி சரண்யா ஆகியோர் ஃப்ரீ ஸ்டைல், க்ரீக்கோ ரோமன் பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.
இதன்மூலம், இவர்கள் தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கின்றனர் . இப்போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் ஜுனிட்ரிலியா மாவட்டம், கோட்ரமா நகரில் இம்மாத இறுதியில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
தேசிய போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு கல்லூரித் தலைவர் எஸ்.சேகர், செயலர் என்.எஸ்.நிர்மலாதேவி, முதல்வர் சி.கே.ரவிசங்கர், நிர்வாக அலுவலர் பி.சதீஷ்குமார், உடற்கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழக அணி மல்யுத்த வீரர்களுக்கான தேர்வு தர்மபுரியில் நடைபெற்றது. இதில், ஐஸ்வர்யா பொறியியல் கல்லூரியின் சார்பில் பங்கேற்ற 3-ம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் தீனதயாளன், கணினி துறை மாணவர் வேல்முருகன், 2-ம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவர் சிவராஜ், கணினி துறை மாணவி சரண்யா ஆகியோர் ஃப்ரீ ஸ்டைல், க்ரீக்கோ ரோமன் பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.
இதன்மூலம், இவர்கள் தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கின்றனர் . இப்போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் ஜுனிட்ரிலியா மாவட்டம், கோட்ரமா நகரில் இம்மாத இறுதியில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
தேசிய போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு கல்லூரித் தலைவர் எஸ்.சேகர், செயலர் என்.எஸ்.நிர்மலாதேவி, முதல்வர் சி.கே.ரவிசங்கர், நிர்வாக அலுவலர் பி.சதீஷ்குமார், உடற்கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment