பவானிசாகர் கருவண்ணராயன் கோவில் அருகே மரத்தில் ஏறிய சிறுத்தை
பவானிசாகர் கருவண்ணராயன் கோவில் அருகே மரத்தில் ஏறிய சிறுத்தை பார்த்த தெங்குமரஹாடா கிராமமக்கள் அச்சத்தில் உறைந்துபோயினர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள்,
புலிகள், கழுத்தைப்புலி மற்றும் காட்டெருமைகள் உள்ளன. பவானிசாகர்
வனசசரகத்தில் மாயாறு ஓடுவதால் நீர்நிலைகளை தேடி வரும் விலங்குகளை புலி,
சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடுகின்றன.
பவானிசாகர் வனப்பகுதி கருவண்ணராயன் கோவில்,
கல்லாம்பாளையம், ஜெகலட்டி போன்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏராளமான
புள்ளிமான்கள் சுற்றித் திரிகின்றன. மேலும் காட்டுப்பன்றி, காட்டெருமை,
மான்கள் தண்ணீர் குடிக்க வருவதால் அவற்றை வேட்டையாட புலிகள் மற்றும்
சிறுத்தைகள் மாயாற்றை படுகையில் பதுங்குகின்றன.. இந்நிலையில், புதன்கிழமை
தெங்குமரஹாடாவைச் சேர்ந்த கிராமமக்கள் மினி டெம்போவில் ஜெகலட்டி வழியாக
சென்றுகொண்டிருந்தனர். அப்போது, புள்ளிமான்கள், காட்டெருமைகள்
மிரட்சியுடன் சாலையின் குறுக்கே பாய்ந்து ஓடியதை பார்த்த கிராமமக்கள்
மினிடெம்போவை நிறுத்தினர். அப்போது சாலையின் குறுக்கை திடீரென பாய்ந்து
வந்த சிறுத்தையால் கிராமமக்கள் பீதியடைந்தனர்.
இதற்கிடையில், சிறுத்தை டெம்போவை பார்த்தும் சரசரவென
மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டது. அங்கு சிறிதுநேரம் அச்சத்துடன் காத்திருந்த
கிராமமக்களுக்கு அவ்வழியாக வந்த காய்கறிவேனை பார்த்தும் சற்று ஆறுதலாக
இருந்தது. காய்கறி வேனை பின்தொடர்ந்து டெம்போவும் பாதுகாப்பாக தெங்குமரஹாடா
சென்றது. சில வாரங்களுக்கு முன்பு சாலையோர பாறை மீது புலி அமர்ந்திருப்பதை
அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். அண்மைகாலமாக புலி மற்றும்
சிறுத்தையின் நடமாட்டத்தால் அப்பகுதியில் பீதியடைந்துள்ளனர். தெங்குமராஹாடா
கிராமமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்துவிட்டு மினிவேன்,
டெம்போவை பயன்படுத்துகின்றனர்.
0 comments:
Post a Comment