தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 28, 2014

பழங்கால முறையில் மரவண்டி செய்து அசத்தும் பழங்குடியின சிறுவர்கள்



 காட்டில் கிடைக்கும் மரத்துண்டுகளை கொண்டு பழங்கால முறையில் மரவண்டிகளை செய்து கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்  காளிதிம்பம் பழங்குடியின அசத்தல் சிறுவர்கள் .

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குபட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள காளிதிம்பம். இங்கு 70க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். திம்பம்-தலமலை சாலையில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள இக்கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கிடையாது. செங்குத்தான கரடு முரடான மண்சாலையாக இருப்பதால் வாகனங்கள் இயக்கமுடியாத சூழல் உள்ளது. அனைவரும் நடைப்பயணமாகத் தான் கிராமத்துக்கு வந்து செல்லவேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டு வாழும் இக்கிராமத்தில் பள்ளிக்கூட வசதி கிடையாது.

இதனால், இங்குள்ள குழந்தைகள் படிக்க வேண்டுமெனில் 15 கிமீ தூரத்தில் உள்ள தலமலை உண்டி உறைவிடப்பள்ளிக்கு செல்லவேண்டும். பேருந்து வசதியில்லாததால் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் மாணவி கூட உறைவிடப்பள்ளியில் தான் தங்கி பயில வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள  32  மாணவ,மாணவிகளும் தலமலை உண்டி உறைவிடப்பள்ளியில் படித்து வருகின்றனர். பெற்றோர்கள் வாரமொருமுறை  குழந்தைகளை வீட்டு அழைத்து வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறை என்பதால் அனைவரும் காளிதிம்பத்தில்  தங்களது பொழுதுபோக்கை கழித்து வருகின்றனர்.

மாணவர்கள் தங்களது விளையாட்டுக்கு தேவையான பொருள்களை அவர்களாகவே தயாரித்து கொள்கின்றனர். மரவண்டியில் சறுக்கு விளையாடுவது இவர்களின் பொழுதுபோக்கு.

மலைக்கிராமத்தில் கிடைக்கும் மரத்துண்டுகளை எடுத்து வந்து உருண்டை வடிவில் மூன்று சக்கரங்களை செதுக்கின்றனர். பின்னர், முக்கோண வடிவில் மூன்று மரச்சக்கரங்களை வைத்து வலுவான நீளமான மரத்துண்டுகளை பயன்படுத்தி அவற்றை ஒன்றுக்கொன்றுடன் இணைக்கின்றனர். ஸ்டேரிங் போன்று திருப்புவதற்கு ஏதுவாக டி வடிவத்தில் மரத்துண்டுகளை அதில் பொருத்தியும் அதனை விளையாடுவதற்கேற்ப ஒரு மரவண்டியை உருவாக்கின்றனர்.  

இந்த  வண்டிகளை  மேடான பகுதிக்கு எடுத்துவந்து இதில் சிறுவர்கள் அமர்ந்து சறுக்கு விளையாட்டு விளையாடி மகிழ்கின்றனர். ஒரு வண்டியில் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து கொண்டு சரிவான பாதையில் வரும்போது கால்களை பயன்படுத்தி நிலத்தை அழுத்திபிடித்தபடி வண்டியை நிறுத்திக்கொள்கின்றனர்.  வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் வளைந்து செல்லும்  வகையில் மரவண்டியை தயாரித்து பயன்படுத்தும் சிறுவர்கள், தனித்திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆயிரக்கணக்கி்ல் செலவழித்து பல்பொருள்அங்காடியில் குழந்தைகள் ஓட்டும் வண்டிகள் சில நாள்களில் பழுதாகி விடும். எந்தவொரு தயாரிப்பு செலவுமின்றி தங்களது தேவைகளை பூர்த்திச் செய்துகொள்ளும் சிறுவர்கள் கிராமத்து என்ஜினியர்கள் என்று அழைக்கலாம்.

0 comments:

Post a Comment