கொடிவேரிஆற்றில் மூழ்கி கோவை பள்ளி மாணவர் சாவு
கொடிவேரி அணை ஆற்றில் மூழ்கி கோவை பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ஜெயசூரியா(13). இவர்
அங்குள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். ஒண்டிப்புதூர்
கிறிஸ்துவசபை சார்பில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இன்பச்
சுற்றுலாவுக்காக பெரியகொடிவேரி அணைக்கு வியாழக்கிழமை மாலை வந்தனர்.
அப்போது,அணை ஆற்றில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஜெயசூரியா
ஆழமான பகுதிக்கு சென்றதாகவும் வேகமாக வந்த நீரில் அவர் அடித்துச்
செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும்
கிராமமக்கள் அவரை ஆற்றில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில,
வெள்ளிக்கிழமை காலை ஆற்றங்கரையோரம் ஒதுங்கி கிடந்த மாணவரின் சடலத்தை
பங்களாபுதூர் போலீஸார் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீஸார் வழங்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment