ஹாசனூர் வனத்தில் யானை தாக்கி பெண்சிறுத்தை குட்டி பலி
ஹாசனூர் வனத்தில் யானை தாக்கியதில் பெண் சிறுத்தை குட்டி பலியானது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஹாசனூர் வனச்சரகத்தில்
மாவட்ட வனஅலுவலர் சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் பெர்னார்டு ஆகியோர்
கொண்ட தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது,
கோட்டாடை அடர்ந்த காட்டுப்பகுதி பெரியகாரை என்ற இடத்தில் சிறுத்தை குட்டி
இறந்தது கிடப்பது தெரியவந்தது.சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றிய
வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரித்தனர். சிறுத்தை இறந்து கிடந்த
இடத்தில் யானையின் கால்தடம், முறித்து விசியெறிப்பட்ட மரக்கிளைகள் மற்றும்
யானயின் சாணம் ஆகியவற்றை பார்த்தனர்.இதன் மூலம் சிறுத்தைகுட்டியை யானை
கொன்றது உறுதிசெய்யப்பட்டது.
தாய்சிறுத்தை குட்டியை விட்டு பிரிந்து வேட்டைக்கு
சென்றதாகவும் அப்போது, அங்கு வந்த காட்டுயானையிடம் குட்டி
மாட்டிக்கொண்டதாகவும் சிறுத்தைகுட்டியை தும்பிக்கையால் தாக்கி கொன்றதாவும்
வனத்துறையினர் தெரிவித்தனர். கால்நடைமருத்துவர் கே.மனோகரன் தலைமையில்
மருத்துவகுழுவினர் சிறுத்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.
சிறுத்தையின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் யானை தாக்கி
உயிரிழந்தது பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டது.யானை தாக்கியதில்
பெண்சிறுத்தை குட்டி பலியானது இதுவே முதல் முறை என மாவட்ட வனஅலுவலர்
சி.ஹெச்.பத்மா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment