பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்திய மக்னாயானை வன்ததுறையினர் விரட்டினர்.
பவானிசாகர் வனத்தில் இருந்து வெளியேறிய மக்னா யானை
சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து கோட்டைப்புதூர்
கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள துரை(55) என்பவரது வீட்டு முன்புள்ள
சப்போட்டா மரத்தின் கொம்புகளைமுறித்த பழங்களை தின்றது. அங்கு வந்த துரை யானையின் அட்டகாசத்தை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பொது மக்கள்தீப்பந்தங்களை காட்டியும் பட்டாசு வெடித்தும் யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற மக்னா யானை பெரியகள்ளிப்பட்டி வடக்குத்தோட்டம் தங்கவேல்(37) என்பவரது தோட்டத்தில் நுழைந்து அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கதலி ரக வாழைகளை தின்றும் மிதித்துசேதம் செய்தது. மேலும் அடுத்துள்ள தீவன சோளப் பயிரையும் மிதித்து சேதப்படுத்தியது.
பக்கத்து விவசாயிகள்
திரண்டு வந்து விடிய விடிய யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில்
ஈடுபட்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது
0 comments:
Post a Comment