தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 23, 2014

வறட்சி: கடம்பூர் மலைக்கிராமங்களில் பலா சாகுபடி பாதிப்பு

கடம்பூர் மலைகிராம தோட்டத்து மரத்தில் காய்த்துள்ள பலா
 வறட்சி காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் பலா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

பலா மரங்கள் வளர்வதற்கேற்ற சீரான தட்பவெப்பநிலை தாளவாடி, கடம்பூர் வனத்தில் மட்டுமே நிலவுவதால் இங்குள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்த்தில் பலா மரங்களை வளர்த்து வருகின்றனர். பலா மரங்கள் வளர்க்க உற்பத்தி செலவு இல்லாததால் ஆணடுதோறும் பலா விற்பனையால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

அத்தியூர், பவளக்குட்டை,மூலக்கடம்பூர்,சாலட்டி, நடூர் மற்றும் மல்லியம்துர்க்கம் மலைகிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பலா மரங்கள் உள்ளன.இயற்கையான முறையில் பலா மரங்கள் வளர்வதால் இதற்கு சுவை அதிகம்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால்  ஒரு மரத்தில் சுமார் 300 பழங்கள் வரை வரத்து வந்துள்ளது. வறட்சியில் குளம், குட்டைகள் மற்றும் பள்ளங்கள் வறண்டு காணப்படுவதால் பலா மரங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் அதன் உற்பத்தி பாதித்துள்ளது. தற்போது, பெரும்பாலன மரங்களில் குறைந்தபட்சமாக 20 பழங்களும் அதிகபட்சமாக 60 பலாப்பழங்களும் வரத்து வந்துள்ளன. பலா ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.200 வரை விலை கிடைத்துள்ளது.பலாப்பழங்களை வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.

0 comments:

Post a Comment