பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி போராட்டம்: டாக்டர் எம்.ஆர்.சிவசாமி
சத்தியமங்கலம், ஜூன் 22:
பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சிவசாமி சத்தியில் தெரிவித்தார்.
:
இது குறித்து மேலும் அவர் கூறியது: சத்தி, கோபி வட்டங்களில் உள்ள விவசாயிகள் பவானி ஆற்று நீரை பம்ப் செட் மூலம் எடுத்து குழாய் வழியாக தோட்டங்களுக்கு கொண்டு சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். நீர்ப்பாசனப் பகுதியில் ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கும் நீரைவிட பம்ப் செட் பாசனத்தில் மிகக்குறைவாக தண்ணீர் எடுத்து அதிகமான உற்பத்தி செய்கின்றனர்.
பம்ப்செட் மூலம் தண்ணீர் எடுப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. கேரளா,கர்நாடக மாநிலங்களில் ஆற்றில் இருந்து பம்ப் செட் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்ய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதை போல தமிழகத்திலும் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.
சத்தி, கோபி வட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.இது போன்ற பிரச்னைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விவாசயிகள் போராட்டம் நடத்துவதும் என்றும் இதற்கான சத்தி, கோபி, அந்தியூர் வட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் சத்தியில் ஜூன் 27ம் தேதி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்
பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சிவசாமி சத்தியில் தெரிவித்தார்.
:
இது குறித்து மேலும் அவர் கூறியது: சத்தி, கோபி வட்டங்களில் உள்ள விவசாயிகள் பவானி ஆற்று நீரை பம்ப் செட் மூலம் எடுத்து குழாய் வழியாக தோட்டங்களுக்கு கொண்டு சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். நீர்ப்பாசனப் பகுதியில் ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கும் நீரைவிட பம்ப் செட் பாசனத்தில் மிகக்குறைவாக தண்ணீர் எடுத்து அதிகமான உற்பத்தி செய்கின்றனர்.
பம்ப்செட் மூலம் தண்ணீர் எடுப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. கேரளா,கர்நாடக மாநிலங்களில் ஆற்றில் இருந்து பம்ப் செட் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்ய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதை போல தமிழகத்திலும் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.
சத்தி, கோபி வட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.இது போன்ற பிரச்னைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விவாசயிகள் போராட்டம் நடத்துவதும் என்றும் இதற்கான சத்தி, கோபி, அந்தியூர் வட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் சத்தியில் ஜூன் 27ம் தேதி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்
0 comments:
Post a Comment