புன்செய் புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அரசு நிதி உதவி
புன்செய்புளியம்பட்டி ஜூன் 12;
புன்செய் புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 3 மாணவ மாணவியர்களின் தந்தை சாலை விபத்தினால் மரணம் அடைந்ததால் அரசு சார்பில் தொடர்ந்து கல்வி பயில ரூபாய் 50000 நிதி உதவி வழங்கப்பட்டது.
புன்செய் புளியம்பட்டி நேரு நகரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி. இப்பள்ளியில் சுமார் 450 மாணவ மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இங்கு பயின்று வந்த 3 மாணவ மாணவியர்களின் தந்தை சாலை விபத்தினால் மரணம் அடைந்ததை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த 3 மாணவ மாணவியரும் தொடர்ந்து கல்வி பயில அரசு சார்பில் ஒருவருக்கு ரூபாய் 50000 வீதம் ரூபாய் 1,50,000 வங்கியில் டெபாசிட் செய்த காசோலையை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களும், நல்லூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஏ.சொக்கலிங்கம் ஆகியோர் மாணவ மனவியர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் எஸ்.தேவேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ நன்றி கூறினார். அதே போல் அக்கரைதத்தபள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவிக்கு ரூபாய் 50000 மற்றும் மாராயிபாளையம் பள்ளி மாணவிக்கு ரூபாய் 50000 வீதம் அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
புன்செய் புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 3 மாணவ மாணவியர்களின் தந்தை சாலை விபத்தினால் மரணம் அடைந்ததால் அரசு சார்பில் தொடர்ந்து கல்வி பயில ரூபாய் 50000 நிதி உதவி வழங்கப்பட்டது.
புன்செய் புளியம்பட்டி நேரு நகரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி. இப்பள்ளியில் சுமார் 450 மாணவ மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இங்கு பயின்று வந்த 3 மாணவ மாணவியர்களின் தந்தை சாலை விபத்தினால் மரணம் அடைந்ததை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த 3 மாணவ மாணவியரும் தொடர்ந்து கல்வி பயில அரசு சார்பில் ஒருவருக்கு ரூபாய் 50000 வீதம் ரூபாய் 1,50,000 வங்கியில் டெபாசிட் செய்த காசோலையை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களும், நல்லூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ஏ.சொக்கலிங்கம் ஆகியோர் மாணவ மனவியர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் எஸ்.தேவேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ நன்றி கூறினார். அதே போல் அக்கரைதத்தபள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவிக்கு ரூபாய் 50000 மற்றும் மாராயிபாளையம் பள்ளி மாணவிக்கு ரூபாய் 50000 வீதம் அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment