சத்தி டாஸ்மாக் கடையில் ரூ.1.23 லட்சம் திருட்டு
சத்தியமங்கலத்தில்
டாஸ்மாக் கடையில் ரூ.1.23 லட்சம் திருட்டு போன்து குறித்து சத்தி போலீஸார்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் - கோபி சாலையில் மாவட்ட வன அலுவலகம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இதன்
மேற்பார்வையாளர் ராமேஸ்வரன்(37),விற்பனையாளர்கள் மாரிமுத்து (32), சரவணன்
(30) ஆகியோர் கடையில் விற்பனையை முடித்துக்கொண்டு விற்பனை இருப்பு ரூ.1.23
லட்சத்தை பணப்பெட்டியில் வைத்துள்ளனர். பின்னர். இவர்கள் கடை ஷட்டரை
பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். கடைபணியாளர்கள் மாரிமுத்து மற்றும்
சரவணன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை வழக்க்மபோல கடையை திறக்க வந்தபோது
ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பெட்டியில் இருந்த ரொக்கம் ரூ.1.23 லட்சம்
திருட்டு போனது தெரியவநத்து. இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சத்தி
போலீஸில் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களுடன்
ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த
வீதியில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனம், ஆட்டோ பைனான்ஸ் ஆகிய கடைகளிலும்
பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து
சத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment