தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 24, 2014

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாலிபர் கழுத்தறுத்து கொலை.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்ட பண்ணாரி வனப்பகுதியில்
புதுக்குய்யனூர் பிரிவு அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அடையாளம்
தெரியாத வாலிபர்.



சத்தியமங்கலம், ஜூன்.25. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் பிரிவு அருகே சத்தியமங்கலம் & மைசூர் சாலையிலிருந்து 100 அடி தொலைவில் வனப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனச்சரகர் ஆனந்தன் சத்தியமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சத்தியமங்கலம் டிஎஸ்பி மோகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். கொலையான நபர் கறுப்புநிற பேண்டும், மங்கிய வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்.  பிரேதத்திற்கு அருகே 2 அடி சுற்றளவிற்கு ரத்தக்கறை படிந்திருந்தது. ஈரோட்டிலிருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்தனர். ஈரோடு ஏடிஎஸ்பி பாலாஜிசரவணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது  குறிப்பிடத் தக்கது.  சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment