புன்செய் புளியம்பட்டியில் தீ விபத்து - குடிசை நாசம்
புன்செய் புளியம்பட்டி, ஜூன்.24. புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை
சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பொன்னி(42). கணவரை விட்டு தனியாக பிரிந்து காந்திநகர் பகுதியில் உள்ள குடிசைவீட்டில் வசித்து வருகிறார். நேற்று
முன்தினம் மாலை இவர் அருகே உள்ள மகள் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கிக்கொண்டார். இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது குடிசை தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகே உள்ளவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலை தொவித்துவிட்டு தீயை அணைக்க போராடினர்.
தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் சேர்ந்து தீயை அணைப்பதற்குள் அருகே உள்ள சண்முகம் என்பவரது குடிசையின் ஒருபகுதியும், அருகே
நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டு கதவும் சேதமடைந்தது. பொன்னி
வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி, பீரோ, துணிமணிகள்,
சமையல்பாத்திரங்கள், மளிகைசாமான்கள், வங்கி பாஸ் புத்தகம், சமையல்
எரிவாயு புத்தகம் உள்ளிட்ட ரு.25000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி
சேதமடைந்தன. தீ விபத்த குறித்து விஏஓ கோபாலகிருஷ்ணன் மற்றுமு
புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புன்செய் புளியம்பட்டி, ஜூன்.24. புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை
சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பொன்னி(42). கணவரை விட்டு தனியாக பிரிந்து காந்திநகர் பகுதியில் உள்ள குடிசைவீட்டில் வசித்து வருகிறார். நேற்று
முன்தினம் மாலை இவர் அருகே உள்ள மகள் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கிக்கொண்டார். இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது குடிசை தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகே உள்ளவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலை தொவித்துவிட்டு தீயை அணைக்க போராடினர்.
தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் சேர்ந்து தீயை அணைப்பதற்குள் அருகே உள்ள சண்முகம் என்பவரது குடிசையின் ஒருபகுதியும், அருகே
நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டு கதவும் சேதமடைந்தது. பொன்னி
வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி, பீரோ, துணிமணிகள்,
சமையல்பாத்திரங்கள், மளிகைசாமான்கள், வங்கி பாஸ் புத்தகம், சமையல்
எரிவாயு புத்தகம் உள்ளிட்ட ரு.25000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி
சேதமடைந்தன. தீ விபத்த குறித்து விஏஓ கோபாலகிருஷ்ணன் மற்றுமு
புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment