சத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம்
சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் துப்புரவு பணியாளர்கள் 87 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் நகர்ப்புற சுகாதார நிலையம் மற்றும்
ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நடத்திய இலவச
கண்சிகிச்சை முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமை
வகித்தார். முகாமில், ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள்
துப்புரவு பணியாளர் 87 பேருக்கு கண்பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 20க்கும்
மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து ,மாத்திரைகள் இலவசமாக
வழங்கப்பட்டன. நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார அலுவலர்
எம்.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment