தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 10, 2014

புன்செய்புளியம்பட்டியில் புதி அம்மா உணவகம் 
நகராட்சி தலைமை பொறியாளர் ஆய்வு.




புன்செய்புளியம்பட்டியில் புதிய அம்மா உணவகம் அமைய உள்ள இடத்தை நகராட்சி ஆணையரக  தலைமை பொறியாளர் எஸ்.வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் 360 புதிய அம்மா உணவகங்கள் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி,124 நகராட்சிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது. மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்படுகிறது. இதற்கு ஏழை, எளிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில்,புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம்,வடக்கு பகுதியில் புதிய அம்மா உணவகம் அமைய உள்ள இடத்தை நகராட்சி ஆணையரக தலைமை பொறியாளர் எஸ்.வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர்,புதிய அம்மா உணவகம் அமைய உள்ள இடத்தின் அளவுகள் குறித்து, நகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது,நகராட்சி மண்டல செயற்பொறியாளர் எஸ்.திருமாவளவன்,மண்டல உதவி செயற்பொறியாளர் தங்கராஜ்,
நகராட்சி ஆணையாளர் க.செந்திவேல்,நகராட்சி பொறியாளர் லலிதாமணி,சுகாதார ஆய்வாளர் வீரபாகு உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment