மைசூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மலைப்பாம்பு சாவு
மைசூர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மலைப்பாம்பு உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்
புலிகள் காப்பகம், திம்பம் வனப்பகுதியில் மலைப்பாம்புகள் அதிகமாக
காணப்படுகின்றன. அண்மையில் பெய்த மழையால் திம்பம் வனப்பகுதி பசுமையாக
இருப்பதால் அடர்ந்த காட்டில் வாழும் மலைப்பாம்புகள் மைசூர் சாலையை கடந்து
பிற பகுதிக்கு செல்லும். இந்நிலையில், ஆசனூர் அருகே 10 அடி நீளம் கொண்ட ஒரு
மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது. அப்போது, வேகமாக வந்த வாகனம்
மலைப்பாம்பு மீது மோதியதில் பலத்த காயமடைந்த மலைப்பாம்பு உயிருக்கு
போராடிக் கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மலைப்பாம்வை
சாலையோரத்தில் அப்புறப்படுத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாம்பின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அது சில
நிமிடங்களில் உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து
வருகின்றனர்.
0 comments:
Post a Comment