பண்ணாரி சோதனை சாவடி ரூபாய் 24 லட்சத்தில் நவீன மயமாக்க படுகிறது
சத்தியமங்கலம், ஜூன்.14.
சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரி சோதனை சாவடியை ரூபாய் 24 லட்சம் செலவில் நவீன மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக கர்நாடக மாநில எல்லையின் முக்கிய சோதனை சாவடியாக பண்ணாரி சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனங்களும் இந்த சோதனை சாவடியில் சோதனை நடத்திய பிறகு மலைபகுதிகுள் அனுமதிக்க படுகின்றன.
வனபகுதிக்குள் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், வாகனம் எங்கு செல்கின்றது என்பது போன்ற விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்தபின் வாகனங்கள் அனுப்ப படுகின்றன. இதே போல் ஒவ்வொரு வாகனத்துக்கும் இந்த முறை கடைபிடிக்க படுவதால் காலவிரயம் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது வாடிக்கையாகி விட்டது.
இதனை அடுத்து பண்ணாரி சோதனை சாவடியை நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூபாய் 24 லட்சம் செலவில் சோதனை சாவடி நவீனமயமாக்க படுகிறது. அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாகும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது. சோதனை சாவடியின் முகப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாகனத்தின் எண், ஓட்டுனரின் போட்டோ உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் தானாகவே பதிவாகும் வகையில் வடிவமைக்க படுகிறது. சுங்க சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் போல அனைத்து நடவடிக்கைகளும் கணினி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாகவும், சோதனை சாவடி நவீன படுத்தும் பணி 6 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரி சோதனை சாவடியை ரூபாய் 24 லட்சம் செலவில் நவீன மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக கர்நாடக மாநில எல்லையின் முக்கிய சோதனை சாவடியாக பண்ணாரி சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனங்களும் இந்த சோதனை சாவடியில் சோதனை நடத்திய பிறகு மலைபகுதிகுள் அனுமதிக்க படுகின்றன.
வனபகுதிக்குள் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், வாகனம் எங்கு செல்கின்றது என்பது போன்ற விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்தபின் வாகனங்கள் அனுப்ப படுகின்றன. இதே போல் ஒவ்வொரு வாகனத்துக்கும் இந்த முறை கடைபிடிக்க படுவதால் காலவிரயம் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது வாடிக்கையாகி விட்டது.
இதனை அடுத்து பண்ணாரி சோதனை சாவடியை நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூபாய் 24 லட்சம் செலவில் சோதனை சாவடி நவீனமயமாக்க படுகிறது. அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாகும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது. சோதனை சாவடியின் முகப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாகனத்தின் எண், ஓட்டுனரின் போட்டோ உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் தானாகவே பதிவாகும் வகையில் வடிவமைக்க படுகிறது. சுங்க சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் போல அனைத்து நடவடிக்கைகளும் கணினி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாகவும், சோதனை சாவடி நவீன படுத்தும் பணி 6 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment