தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 10, 2014

புன்செய் புளியம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்



புன்செய் புளியம்பட்டி ஜூன் 10:  ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், முத்தூட் பின்கார்ப், முத்தூட் மகிளா மித்ரா, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்  காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை புன்செய் புளியம்பட்டி பாக்யலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். முத்தூட் பின்கார்ப், முத்தூட் மகிளா மித்ரா,  நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஜி.சுமேஷ், பகுதி மேலாளர் சி.முருகானந்தம், கிளை மேலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவர்கள் அரவிந்தா, சம்சுதா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இம்முகாமில் 250 இகும் மேற்பட்ட புறநோயாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர். மேலும் 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுகபட்டு கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை, தாங்கும் வசதி, பேருந்து வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிர்வாகிகளும், முத்தூட் பின்கார்ப், முத்தூட் மகிளா மித்ரா நிறுவனத்தின் பொறுப்பாளர்களும் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment