ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க துவக்க
விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா
சத்தியமங்கலம், ஜூன்.24. ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா சத்தியமங்கலம் ஜேகேபி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனரும் மாநில ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் கவுரவ தலைவருமான ஓ.ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் வெள்ளிங்கிரி, மாநில பொதுச்செயலாளர் ஜனகரன், மாநில இளைஞரணித்தலைவர் ஜோதிமணி, மாவட்ட சீரமைப்புக்குழு தலைவர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் தலைவராக டி.என்.பாளையம் குப்புராஜ், துணைத்தலைவர்களாக துறையம்பாளையம் ஜெயப்பிரகாஷ், சத்தியமங்கலம் சக்தி, செயலாளராக புஞ்சைபுளியம்பட்டி சண்முகசுந்தரம், துணைச்செயலாளர்களாக நஞ்சப்பகவுண்டன்புதூர் கோவிந்தராஜ், பனையம்பள்ளி பழனிச்சாமி, பொருளாளராக பகுத்தம்பாளையம் தங்கவேலு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை மாநிலத்தலைவர் வெள்ளிங்கிரி அறிமுகப்படுத்தினார். பின்னர் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். சங்க வளர்ச்சி நிதியாக ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட தலைவர் குப்புராஜ் வழங்கினார். இவ்விழாவில் கோபி தாசப்பகவுடர் அறநிலைய டிரஸ்டி செந்தில்குமார், டாக்டர் மூர்த்தி, வழக்கறிஞர்கள் மாசிலாமணி, கனகராஜ், தொழிலதிபர் தங்கவேல் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். முன்னதாக கோவிந்தராஜ் வரவேற்றார். ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
கலந்து கொண்டனர். முன்னதாக கோவிந்தராஜ் வரவேற்றார். ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment