மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க தலைவராக டாக்டர் மு.இஸ்மாயில் பதவியேற்பு.
மேட்டுப்பாளையம்.ஜூன்.26.மேட்டு ப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் 2014-2015 ஆண்டின் புதிய தலைவராக டாக்டர் ஹாஜி.மு.இஸ்மாயில் பதவியேற்றார்.ரோட்டரி சங்கத்தி ன் புதிய
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா,மெட்ரோ மெட்ரிக்குலேசன் பள்ளி குரு மிஸ்திரி
ஹாலில் நடந்தது.சங்க தலைவர் எம்.கே.எஸ்.விஜயகுமாரன் தலைமை
தாங்கினார்.செயலாளர் சுந்தரகணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் ரோட்டரி
ஆளுநர் [தேர்வு]டாக்டர் ஜார்ஜ் சுந்தராஜன் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.தலைவராக
ஸ்மையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹாஜி.மு.இஸ்மாயில் ,செயலாளராக
மதனகோபால்,பொருளாளராக பூமிநாதன்,துணைதலைவராக எல்.நாகராஜ், இணை செயலாளராக
சுரேஷ் சந்த் நகார்,மற்றும் உறுப்பினர் சேர்க்கை குழு
பாலகோபால், சங்கநிர்வாக குழு சிதுராம் பாபு,சேவை திட்டங்கள் ஸ்ரீராம்,சங்க
அறக்கட்டளை ஜே.ஸ்டீபன், பொதுமக்கள் தொடர்பு சோமசுந்தரம், வீரபத்திரன், ஆகியோ ர் உட்பட 25 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
விழாவில்,கோவை ஸ்ரீ விஜயலட்சுமி,பொதுநல அறக்கட்டளை நிறுவனர்
ஓ.ஆறுமுகசாமி, மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார், மகாஜன பள்ளி
செயலாளர் என்.கிருஷ்ணசாமி,அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்
பி.நவ்ரத்தன்மல்,மேட்டுப்பாளை யம் அனைத்து இந்து சமுதாய சங்க தலைவர்
சி.பி.எஸ்.பொன்னுசாமி,மின்வாரிய செயற்பொறியாளர் முகமது முபாரக்,இயற்க்கை
ஆர்வலர் ஜலால், என்.எல்.பி.கல்லூரி செயலாளர் முத்துசாமி,முதல்வர்
சண்முகம், உட்பட ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள்,நிர்வாகிகள்,உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் மேட்டுப்பாளையம் பகுதியில் 10.மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதிய
தலைவராக பதவியேற்ற டாக்டர் மு.இஸ்மாயில் கூறியதாவது;இந்த ஆண்டு
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தேர்வு செய்து ரோட்டரி
உறுப்பினர்கள் மாணவரின் கல்வி,மற்றும் உடல் நலம் பராமரிப்பில் அக்கறை
கொண்டு சிறந்த ஒழுக்கமுள்ள மாணவனாக உருவாக்குவது.[EACH ONE,REACH ONE,TEACH
ONE],கேன்சர் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இயற்கை முறையில்
பயிரிடப்பட்ட ரசாயனமற்ற வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைக்க கூட்டு
முயற்சி,செய்வது, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண் குழந்தைகளை காப்பாற்றுவதர்க்காக
விழிப்புணர்வு தற்காப்பு முறைகள் போதிக்க பள்ளிகளில் சிறப்பு பயிற்சி
வழங்குவது,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனை சுகாதார மேம்பாட்டு
திட்டங்கள் செயல்படுத்த அரசு,மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து
செயல்படுவது உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுதப்படுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார். முடிவில் செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment