தாளவாடியில் கோஸ் சாகுபடி பரப்பளவு குறைந்தது
கிலோ ரூ.10 ஆக உயர்வு
சத்தியமங்கலத்தை
அடுத்துள்ள தாளவாடி மலை கிராமங்களில் கோஸ் சாகுபடி பரப்பளவு
குறைந்துவிட்டதால் கடந்த ஆண்டு கிலோ ரூ.4-க்கு விற்கப்பட்ட கோஸூக்கு
தற்போது ரூ.10 வரை விலை கிடைத்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடியை அடுத்துள்ள
எரணஹள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி,
தமிழ்புரம், நெய்தாளபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள்
நீலகிரி,சேன்டேஸ்,கணேஸ், போன்ற பல்வேறு ரக கோஸ் சாகுபடி செய்து வந்தனர்.
பெரும்பாலான விவசாயிகள் கோஸ் சாகுபடிக்கு மாறியதால் அதன் உற்பத்தி
பன்மடங்காக அதிகரித்தால் ஒரு கிலோ ரூ.2ஆக சரிந்தது. போதிய விலை
கிடைக்காததால் கோஸ் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
நடப்பாண்டு பருவமழை பொயத்துவிட்டதால், சாகுபடி
செய்யப்பட்ட நிலப்பரப்பில் 20 சதவீதம் மட்டுமே கோஸ் சாகுபடி செய்யப்பட்டது.
பாசன வசதியுள்ள சூசைபுரம், திகினாரை, மல்லன்குழி ஆகிய பகுதியைச் சேர்ந்த
விவசாயிகள் கோஸ் பயிட்டுள்ளனர்.
சொட்டுநீர் பாசனம் மூலம் கோஸ் உற்பத்தி
செய்யப்படுவதால் குறைந்தளவே தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் பருவகாலம் 80
முதல் 90 நாள்கள் ஆகும். ஏக்கர் ஒன்றுக்கு 20 டன் வரை மகசூல் கிடைப்பதால்
இங்கு நீலகிரி ரக கோஸூக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். தற்போது கிலோ
ரூ.10க்கு விற்கப்படுவதால் ஈரோடு, மேட்டுபாளையம் கோஸ் மண்டி வியாபாரிகள்
கிராமத்துக்கு வந்து நேரடி கொள்முதல் செய்கின்றனர்.
தாளவாடி விவசாயி மயில்சாமி கூறியது: கடந்த ஆண்டு
கோஸூக்கு சரியான விலை கிடைக்காததால் இந்தாண்டு அதன் சாகுபடி பரப்பளவு
குறைந்துவிட்டது. இதன் காரணமாக, கோஸ் வரத்து குறைந்து விட்டதால் தற்போது
கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை உற்பத்தி
செலவாகிறது. ஏக்கர் கோஸ் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கர்நாடக மாநிலம்
ஹாசன் பகுதியில் கோஸ் உற்பத்தி குறைந்துள்ளதால் கோஸ் விவசாயிகளுக்கு நல்ல
லாபம் கிடைக்கும் என்றார்.
0 comments:
Post a Comment