ராஜன் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ராஜன் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள ராஜன்நகர் ராஜன் நகர் ஸ்ரீ
முத்துமாரியம்மன் கோவில் விழா மே 22ம் தேதி முனியப்பன் பூஜையுடன்
துவங்கியது. மே 27ம் தேதி இரவு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக
அலங்கார பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியைத்
தொடர்ந்து கோயில் முன் கம்பம் நடும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட
இளைஞர் கம்பத்தை சுற்றி வந்து கம்பத்தாட்டம் ஆடினர்.வியாழக்கிழமை முதல்
கம்பத்துக்கு பெண்கள்,குழந்தைகள் புனித நீர் ஊற்றியும் மஞசள் பூசியும்
வழிபட்டனர்.
விழாவையொட்டி, கோவிலில் தினந்தோறும் அம்மனுக்கு
அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை(ஜூன்.2ல்) காலை
குண்டத்திற்கு எரிகரும்பு வெட்டும் நிகழ்ச்சியும் இரவு கங்கணம் கட்டும்
நிகழ்ச்சியும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் அழைத்தல் மற்றும்
அரண்மனை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு
பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும்
நடைபெற்றது. பூசாரி ஆண்டவர் முதலில் குண்டத்தில் இறங்கினார். அவரைத்
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர். அதனைத் தொடர்ந்து,
நண்பகலில் மாவிளக்கும் பூஜையும் இரவு முத்துமாரியம்மன் கோவிலில் கம்பம்
பிடுங்குதல் நடைபெற்றது.
இன்று (ஜூன்.5ல்) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் 11ம்தேதி மறு பூஜையும் நடக்கிறது
0 comments:
Post a Comment