தலமலை அருகே ராமர்பாதம் கோயில் கும்பாபிஷேகம்
சத்தியமங்கலம், ஜூன்.14. தாளவாடி அருகே உள்ள தலமலை தொட்டபுரம்
கிராமத்தில் ராமர்பாதம் சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீராமர் கோயில்
வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பின்புறமுள்ள பாறையில் ராமர் பாதமும், ராமர் மண்டியிட்டு அமர்ந்து அம்பு எய்தபோது பாறையில் முழங்கால் அழுந்திய குழியும் உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக இக்கோயில் புனரமைப்பு பணி நடைபெற்றது. புதியதாக ஆஞ்சநேயர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலைகளில்
அக்னிகுண்டத்தில் வேதவிற்பன்னர்கள் சிறப்பு பூஜைகள் செய்து விமான
கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். பின்னர் ஸ்ரீராமர், சீதை, அனுமனுக்கு
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இவ்விழாவில் தொட்டபுரம், தலமலை,
கோடிபுரம், நெய்தாளபுரம், காந்திநகர், சிக்கஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை
சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம், ஜூன்.14. தாளவாடி அருகே உள்ள தலமலை தொட்டபுரம்
கிராமத்தில் ராமர்பாதம் சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீராமர் கோயில்
வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பின்புறமுள்ள பாறையில் ராமர் பாதமும், ராமர் மண்டியிட்டு அமர்ந்து அம்பு எய்தபோது பாறையில் முழங்கால் அழுந்திய குழியும் உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக இக்கோயில் புனரமைப்பு பணி நடைபெற்றது. புதியதாக ஆஞ்சநேயர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலைகளில்
அக்னிகுண்டத்தில் வேதவிற்பன்னர்கள் சிறப்பு பூஜைகள் செய்து விமான
கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். பின்னர் ஸ்ரீராமர், சீதை, அனுமனுக்கு
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இவ்விழாவில் தொட்டபுரம், தலமலை,
கோடிபுரம், நெய்தாளபுரம், காந்திநகர், சிக்கஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை
சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment