கஞ்சா விற்பனை செய்ய முயன்றவர் கைது
சத்தியமங்கலம், ஜூன்.14. பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டபோது அருகே உள்ள முட்புதர்காட்டில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த குமார்(30) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனர்.
0 comments:
Post a Comment