தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 24, 2014

திம்பம் மலைப்பாதை 27 வது வளைவில் சாலைக்கு வந்த சிறுத்தை



சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டைஊசி வளைவில்
நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு சிறுத்தை தடுப்புச்சுவரை ஒட்டி நின்று
கொண்டிருந்தது.



சத்தியமங்கலம், ஜூன்.25. திம்பம் மலைப்பாதையில் நேற்று அதிகாலையில்
சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் திண்டுக்கல் & பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இம்மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதனால் இப்பாதையில் வாகனங்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடியை சேர்ந்த வேன் டிரைவர் முகமது இலியாஸை 27 வது கொண்டை ஊசிவளைவு அருகே வனப்பகுதியில் கடித்துக் கொன்றது. அதன்பின் சிறுத்தைகள் மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதியில் நடமாடி வருகின்றன. இதனால் மாலை 6 மணி முதல் காலை  6 மணி வரை இருசக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை 4 மணிக்கு 24 வது கொண்டை
ஊசிவளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரின் மறைவில் நின்று சாலையில் செல்லும் வாகனங்களை எட்டிப்பார்த்த வண்ணம் நின்றுகொண்டே இருந்தது. சிறுத்தையைக்கண்ட வாகன ஓட்டிகள் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடியவாறு ஒருவித அச்சத்துடனே வாகனங்களை இயக்கினர்

0 comments:

Post a Comment