காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி சாவு
சத்தியமங்கலம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி என்கிற
மாரண்ணன்(46). இவரது மனைவி அருக்காணி. இவர்களுக்கு செந்தில் என்ற மகன்
உள்ளார். இவர் திங்கள்கிழமை இரவு வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் எதிரில்
உள்ள மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு அருகில் உள்ள காட்டில்
படுத்துக்கொண்டார். அப்போது, அங்கு வந்த காட்டுபன்றி மூர்த்தியை கடித்து
குதறியதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம குறித்து சத்தி
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment