சிறுத்தை நடமாடும் பகுதியில் பொருத்தப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
சிறுத்தை
நடமாட்டத்தை துல்லியமாக அறிய திம்பம் மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி
பகுதியில் 6 நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த
மாதம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் 27வது மலைப்பாதையில் தாளவாடியைச்
சேர்ந்த முகமது இலியாஸ்(25) என்பவரை சிறுத்தை கடித்துக் கொன்றது.அதன்பிறகு,
அதே இடத்தில் கடமானை தாக்கி கொன்றது. அதே இடத்தில் வேட்டையாடி பழகிய
சிறுத்தை அங்கேயே நடமாடி வருகிறது. தமிழக கர்நாடக இடையே முக்கிய வழித்தடமாக
திம்பம் மலைப்பாதை உள்ளதால் சிறுத்தை பயத்தால் வாகன ஓட்டிகள்
பீதியடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மலைப்பாதை
தடுப்புசுவரின் மறைவில் பதுக்கியபடி வாகன ஓட்டிகளை பயமுறுத்தியது.இதனால்,
பைக்கில் செல்லுவம் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இரவு
நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன
ஓட்டிகளை பயமுறுத்தும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க திம்பம்
வனத்தில் உள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் போன்ற 6 இடங்களில் நவீன
தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வீடியோ மற்றும்
புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டும். மேலும் 24க்கும் மேற்பட்ட வேட்டைத்
தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில்
உள்ள புலி, தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டாதால் அந்த எல்லைக்குள்
சிறுத்தைகள் நுழைவதில்லை. அந்த வட்டத்திற்கு வெளியே சிறுத்தைகள் தங்களது
வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதில் திம்பம் பகுதியும் அடங்கும் என
வனத்துறையினர் தெரிவித்தனர்
0 comments:
Post a Comment