10ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி;
பு.புளியம்பட்டி அம்மா மெட்ரிக் பள்ளி சாதனை.
பு.புளியம்பட்டி
அம்மா மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
பெற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீத
தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது.
ஈரோடு
மாவட்டம்,பு.புளியம்பட்டியில், அம்மா மெட்ரிக் பள்ளி மாணவிகள்
டி.கௌசல்யா,வி.வினோதினி ஆகிய இருவரும் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர்.இப்பள்ளி
மாணவன் எஸ்.கார்த்தி 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடமும்,மாணவி
என்.பிருந்தாதேவி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடமும் பிடித்து
சாதனை படைத்துள்ளனர்.
மேலும்,இப்பள்ளியில்
தேர்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவியர் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி
அடைந்துள்ளனர்.இது,100 சதவீத தேர்ச்சியாகும்.
மேலும்,கணித பாடத்தில் 100க்கு
100 மதிப்பெண் பெற்று 4 பேரும்,அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்
பெற்று 20 பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று 4
பேரும் சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி
பெற்ற மாணவ- மாணவிகளை, பள்ளியின் தாளாளர் சம்பூர்ணம் சாமிநாதன் பாராட்டி
பரிசுகள் வழங்கினார்.நிர்வாக இயக்குனர் பி.எஸ்.அன்பு, பள்ளி செயலாளர் ராணி
அன்பு, மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந் து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment