மக்களை தேடி வருவாய்த்துறை முகாம்
பவானிசாகர் ஒன்றியம், உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட மாரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்களைத்தேடி வருவாய்த்துறை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல துணைவட்டாட்சியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் பட்டாமாறுதல், ஜாதிச்சான்று, வருமானச்சான்று, குடியிருப்புச்சான்று, குடும்ப அட்டை கோரி 78 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்று மற்றும் உத்தரவுகளை ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி பொதுமக்களுக்கு வழங்கினார். இம்முகாமில் ஒன்றிய கவுன்சிலர் புரட்சிபத்திரன், வட்ட வழங்கல் அலுவலர் மோகனா, நிலவருவாய் ஆய்வாளர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் தீபா, மோகன், கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களைத்தேடி வருவாய்த்துறை முகாம் |
பவானிசாகர் ஒன்றியம், உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட மாரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்களைத்தேடி வருவாய்த்துறை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல துணைவட்டாட்சியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் பட்டாமாறுதல், ஜாதிச்சான்று, வருமானச்சான்று, குடியிருப்புச்சான்று, குடும்ப அட்டை கோரி 78 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்று மற்றும் உத்தரவுகளை ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி பொதுமக்களுக்கு வழங்கினார். இம்முகாமில் ஒன்றிய கவுன்சிலர் புரட்சிபத்திரன், வட்ட வழங்கல் அலுவலர் மோகனா, நிலவருவாய் ஆய்வாளர் தங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் தீபா, மோகன், கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment