தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 25, 2014

வாழையில் ஊடுபயிராக புகையிலை சாகுபடி

புன்செய் புளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் விவசாயிகள்  வாழையில் ஊடுபயிராக புகையிலை சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது

விவசாயத்தில் கூடுதல் வருமானம் பெறுவதற்காக ஊடுபயிர் சாகுபடி செய்வது புன்செய் புளியம்பட்டி பகுதியில் அதிகரித்து வருகிறது.

புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிளான கணக்கரசம்பாளையம், தாசம்பாளையம், பனையம்பள்ளி, புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, நல்லூர், நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், காராப்பாடி மற்றும் காவிலிபாளையம்  பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.அண்மைகாலமாக  குறைந்து வரும் நீராதாரமும்  மாறி வரும் பருவநிலையின் மாற்றம் காரணமாக விவசாயிகள் ஒரே பயிரை நம்பி இருக்காமல் பல  பயிர்களை சாகுபடி செய்வது தற்போது விவசாயத்தில் கூடுதல் வருமானத்திற்கு உதவியாக உள்ளது.


புன்செய் புளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் விவசாயிகள்  வாழையில் ஊடுபயிராக புகையிலை சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. தனியாக உரம் போடுவதும் தனியாக பாசனம் செய்யவதும் தவிர்க்கப்படுகிறது. இதனால், மண்வளம் அதிகரிப்பதுடன் களைகளும் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்படும். இது குறித்து பனையம்பள்ளி விவசாயி பழனிச்சாமி கூறுகையில், புகையிலை சாகுபடி செய்வதால்  ஏக்கர் ஒன்றுக்கு 1 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதன் உற்பத்தி செலவு ரூ.40 ஆயிரம் ஆகிறது. காய்ந்த பதப்படுத்தப்பட்ட புகையிலை கிலோ ரூ.80 வரை விற்பனையாகும் என்பதால் 3 மாத சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை லாபம் ஈட்டஇயலும். புகையிலை சாகுபடியில் கிடைக்கும் உபரி வருமானத்தில் ஆண்டுபயிரான வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்டமுடியும் என்றார்.

0 comments:

Post a Comment