புத்தக திருவிழா வாசகங்கள்
*********************************
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மரித்த ஆதித்த கரிகாலனுக்காக இப்போது அழ வைத்தது புத்தகங்கள் தான்
- பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்
******************************
புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம்
- திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார்
******************************
ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும்
- திரைப்பட நடிகர் சத்யராஜ்
******************************
இதுவரை புத்தகங்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
- திரைப்பட நடிகர் ஜீவா
******************************
எனக்கு கற்று கொடுத்த ஆசான்கள் புத்தகங்கள் தான்
- திரைப்பட நடிகை ரோகிணி
******************************
புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத வீடு
- ஆவன பட இயக்குனர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்
******************************
தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவிடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.
- வழக்குரைஞர்அருள்மொழி
******************************
ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழந்த அனுபவத்தை புத்தகம் தருகிறது.
- திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான்
******************************
வாசித்தல் ஒரு வரம்! வாசித்தல் ஒரு யோகம்
- கவிபேரரசு வைரமுத்து
******************************
கலைவாணி கையில் இன்னும் புத்தகம் இருக்கிறது. நாம் வாசிக்க வேண்டாமா?
- பட்டிமன்ற நடுவர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
******************************
ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன்
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
******************************
நாம் வாழ்க்கையை வாசிக்க புத்தகங்களை நமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்
- விஜய் டிவி நீயா நானா கோபிநாத்
******************************
ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும்.
- பத்திரிகையாளர் ஞாநி
******************************
மனிதனுடைய மனதின் கோணலை நேர் படுத்துவது புத்தகங்கள் தான்
- காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன்
******************************
ஒவ்வொரு நூலுமே எனக்கு மிகப்பெரிய பரிசு
- திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்
******************************
புத்தகங்களின் மூலமாக நேரடியாக சொர்கத்தை அடைய முடியும்
- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
******************************
உட்கார்ந்த இடத்திலிருந்தே புத்தகத்தின் மூலம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்
- திரைப்பட நடிகர் சிவகுமார்
******************************
உணவை விட புத்தகம் மிகவும் அவசியம்
- திரைப்பட நடிகர் / இயக்குனர் மிஷ்கின்
******************************
0 comments:
Post a Comment