திம்பம் மலைப்பாதையில் தொங்கிய லாரியில் தீவிபத்து
திம்பம் மலைப்பாதையில் தொங்கியபடி நிற்கும் லாரியில் தீப்பிடித்ததால் லாரியின் முன் மற்றும் பின் சக்கரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. |
திம்பம்
மலைப்பாதையில் தொங்கியபடி நிற்கும் லாரியில் தீப்பிடித்ததால் லாரியின்
முன் மற்றும் பின் சக்கரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் அனைத்து
வாகனங்களும் அதேபோல கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வானகங்களும்
திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கின்றன. இந்நிலையில், மேட்டூரில் இருந்து
மைசூருக்கு எரிசாராயம் ஏற்றிய லாரி ஒன்று வெள்ளிக்கிழமை திம்பம்
மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. 7வது வளைவை கடந்துசெல்ல டேங்கர் லாரியை
பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரங்கள்
சாலையோர சுவற்றை இடித்துத்தள்ளிவிட்டு சரிவான பள்ளத்தில் இறங்கியது.
அப்போது,லாரின் பின்புறம் மலைச்சரிவில் உள்ள மரத்தில்மோதிபடி நின்றது.
இதனால் லாரிக்கு பெரும் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மரக்கிளைகளின்
பிடியில் லாரி சிக்கிக்கொண்டதால் அது அந்தரங்கத்தில் தொங்கியவாறு
நிற்கிறது. லாரியில் எரிசாராயம் பாரம் இருப்பதால் அதனை மீட்பதில் சிரமம்
ஏற்படும் என தெரிந்து லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு லாரியின் முகப்பு
பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் அது பிற இடங்களுக்கும் பரவியது. இதனால்
லாரியில் இருந்த சக்கரங்கள் தீயில் எரிந்து கருகின. அங்கு வந்த தீயணைப்பு
வீரர்கள் இரசாயனம் கலந்த திரவத்தை பீய்ச்சி அடித்து, தீ மேலும் பரவாலம்
தடுத்தனர். இதனால் லாரியில் இருந்த எரிசாராயம் தீப்பிடிக்காமல் தப்பியது.
லாரியில் உள்ள எரிசாராயம் இதுவரை அகற்றப்படாமல் இருப்பதால் அவ்வழியாக
செல்லும் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
0 comments:
Post a Comment