சொர்கவாசல் திறப்பு
புன்செய் புளியம்பட்டி ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் கோவிலில் வைகுண்ட
ஏகாதசியை முன்னிட்டு சொர்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்புமிக்க பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி புன்செய் புளியம்பட்டி ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு துவங்கியது. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தரிளினார். அதை தொடர்ந்து எராளமான பக்தர்கள் சொர்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தனர். மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment