பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது |
பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு
உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளரான
பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சன் தலைமை தாங்கினார்.
பயிற்சியின் கருத்தாளர்களாக பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் தேவேந்திரன் மற்றும் கே.ஓ.எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் ஓதியப்பன் ஆகியோர் கருத்தாளர்களாக கருத்துக்களை எடுத்துரைத்தனர். தலைமை
ஆசிரியர் நஞ்சன் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரையும்
வரவேற்று பேசினார். பயிற்சியில் பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி ,
புஞ்சைப்புளியம்பட்டி அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,
காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி , பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ,
தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லூர், காரப்பாடி,
உத்தண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி
மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில்
ஈரோடு மாவட்ட மத்திய இடைநிலைக் கல்வித்திட்ட ( ஆர்.எம்.எஸ்.ஏ ) உதவி
ஒருங்கிணைப்பாளர் இராஜாமணி கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சிக்குரிய
திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்று விளக்கிக்கூறினார். மேலும்
பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
வெங்கடாசலம், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி
வளர்ச்சிக்குரிய திட்டங்களை எடுத்துரைத்தனர். ஒவ்வொரு பள்ளியின்
சார்பாகவும் உறுப்பினர்கள் வளர்ச்சித்திட்டங்களை எடுத்துரைத்தனர்.
0 comments:
Post a Comment