பவானிசாகர் காட்டில் யானைதந்தம் பறிமுதல்: ஒருவர் கைது
பவானிசாகர் காட்டில் யானைதந்தம் பறிமுதல்: ஒருவர் கைது |
பவானிசாகர் விளாமுண்டில் பகுதியில் யானைதந்தத்துடன் திரிந்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பவானிசாகர் விளாமுண்டி பகுதியில் சமூக விரோதிகள்
நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து பவானிசாகர் வனச்சரக அலுவலர்
சிவசுப்பிரமணியம் மற்றும் வனவர் குப்புச்சாமி ஆகியோர் அப்பகுதியில் ரோந்து
பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளாமுண்டி காப்புக்காட்டில் சாக்குப்பையுடன்
திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்
பிடிபட்டவர்,ஒத்தப்பணங்காட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(31) என்றும்
அவரிடமிருந்து 2 கிலோ யானைதந்ததையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து
ராமகிருஷ்ணனிடம் வனத்துறையினர் மேலும் விசாரணை நடந்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment